மதுரையில் அடுத்தடுத்து கொலைகள்: போலீஸார் விசாரணை

மதுரை செல்லூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). கொத்தனார் பணி செய்யும் இவரை மர்ம நபர்கள் 2 பேர் நேற்று இரவு கத்தியால் குத்தினர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

மதுரை செல்லூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). கொத்தனார் பணி செய்யும் இவரை மர்ம நபர்கள் 2 பேர் நேற்று இரவு கத்தியால் குத்தினர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், செல்லூர் கண்மாய் அருகே இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தபோது எழுந்த தகராறில் கொலைகள் நடந்தை அடுத்து பழிக்குப் பழியாக இந்தக் கொலைகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com