விற்பனை தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக நாமக்கல்லில் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் தமிழ்ச்செல்வன்(40) நாமக்கல் சேலம் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர். அதே கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் ராசிபுரத்தைச் சேர்ந்த வரதனின் மகன் முருகேசன்(36). அக்கடையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகராஜா, ஏடிஎஸ்பி (கலால்) பெரியசாமி ஆகியோர் வியாழக்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 9-ம்தேதி மதுக்கள் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.1,60,070ஐ வங்கியில் செலுத்தாமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போதும் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததை அடுத்து தமிழ்ச்செல்வன், முருகேசன் ஆகிய இருவர் மீதும் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1,60,070 தொகையையும் மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.