அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியையின் கணவரை ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் அழகர்ராஜா. இவர், பி.பார்மஸி படித்து விட்டு வேலை தேடி வந்தாரம். அழகர்ராஜாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக் கூறி ஆண்டிபட்டி, காமராஜர்நகரைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அரசு பள்ளியில் ஆசிரியை புஷ்பராணி, அவரது கணவர் பிரசாத் ஆகியோர் பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், வங்கி காசோலையாகவும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
வேலை வாங்கித் தர காலதாமதம் ஏற்பட்டதால் பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு, பிரசாத் அளித்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு புஷ்பராணி, பிரசாத் ஆகியோர் முறையாக பதில் கூறாமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்ததாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் அழகர்ராஜா புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், புஷ்பராணி, பிரசாத் ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் நல்லு வழக்கு பதிந்து, பிரசாத்தை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

