செந்துறை அருகே அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸôர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் சரகம், ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல்(26). இவரிடம் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக கீயூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு உதவி ஆயவாளர் ராஜேந்திரன் மாயவேல் வீட்டில் சோதனை செய்து அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தார். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாயவேல் அரியலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.