விருதுநகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பாவலக்குறிச்சியைச் சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி முருகலட்சுமி(37). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள குடிநீர் சுத்தகரிப்பு ஆலையில் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் என்றும் போல் ஆலை வேலைக்கு திங்கள்கிழமை காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 40 வயது மதிப்பிலான மர்ம நபர் முருகலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினாராம்.
இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் முருகலட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.