மனைவி தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கணவன் கைது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடகாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மனைவி பசுபதி (50). இருவருக்கும் திருமணமாகி பேரன் பேத்திகள் உள்ளனர்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடகாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மனைவி பசுபதி (50). இருவருக்கும் திருமணமாகி பேரன் பேத்திகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, ஆத்திரத்தில் தங்கப்பாண்டி தனது மனைவி பசுபதி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தாராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் தங்கப்பாண்டியை கைது செய்தனர். கொலை குறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com