யு.பி.குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா தனது பாஸ்போர்ட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யு.பி.எச்.எல் நிறுவன பங்கு விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக பிரபல தொழிலதிபரும், யு.பி.குழுமத்தின் தலைவருமான விஜய் மல்லையாவிற்கு எதிராக பல்வேறு நிதி நிறுவனங்கள் பெங்களூருவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தன. பங்கு விற்பனை தொடர்பாக மே 24-ம் தேதிக்குள் கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை விஜய்மல்லையா எந்த கணக்கு வழக்குகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் திங்கள்கிழமை இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம்மனோகர் ரெட்டி முன்னிலையில் நடந்த விசாரணையில், செவ்வாய்க்கிழமை நடக்க உள்ள வழக்கு விசாரணைக்கு விஜய் மல்லையா தனது பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.பங்கு விற்பனை தொடர்பான கணக்குவழக்குகளை அப்போது விஜய்மல்லையா தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.