நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.தமிழகம் வந்துள்ள ராஜ்நாத் சிங் பாஜக நிர்வாகிகளோடு கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் மாலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில் 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.
தேசிய அளவிலும், தமிழக அளவிலும் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேசி வருகிறோம். அது தொடர்பாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது.ஆனால் தக்க தருணத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்போம்.