சென்னை அயனாவரம் மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் ஆய்வு செய்தார்.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் சென்னை, அயனாவரம் மருத்துவமனைக்கு செவ்வாய் கிழமை காலை வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால், மருத்துவமனையை ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.
பிறகு நோயாளிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.