சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இலங்கை பிரசனைக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை பிரதமருக்கு அனுப்பட்டுள்ளது . இது தனிபட்ட முதல்வரின் மனு இல்லை.ஒட்டு மொத்த மக்களின் குரல். இந்த தீர்மானம் குறித்து காங்கிரஸ் விவாதம் எதுவும் நடத்தாமல் அதனை நிராகரித்துவிட்டோம் என்று சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியது தவறு. மக்களின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பு அளிக்காது என்பதற்கு இது மற்றும் ஒரு உதாரணம் ஆகும் எனக் கூறினார்.