மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் மனுத்தாக்கல் செய்ய தாரை தப்பட்டைகளுடன் கிளம்பினார் மதுரை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி 5 பேருடன் மட்டுமே செல்லலாம் என்றனர். இதனால் சரியாக 11.40க்கு 5 பேருடன் உள்ளே சென்றார். சென்ற பிறகுதான் வேட்பு மனுவை எங்கே எங்கே என்று சுற்றுமுற்றும் தேடினார். அப்போதுதான் வேட்புமனுவை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. இதை அடுத்து அலுவலகத்தின் வெளியே ஆசுவாசப்படுத்தியபடி அமர்ந்தார். இதனால் காங்கிரஸ் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.