விதி மீறல்: திமுக நகரச்செயலாளர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனைச் சாலையில் சனிக்கிழமை இரவு மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்னவேலை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவரை
Updated on
1 min read

விருதுநகரில் தேர்தல் விதிமுறை மீறி கொடி, தோரணம் ஆகியவைகள் வைத்தது தொடர்பாக திமுக நகரச் செயலாளர் மீது மேற்கு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனைச் சாலையில் சனிக்கிழமை இரவு மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்னவேலை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவரை வரவேற்று அப்பகுதியில் தேர்தல் விதிமுறை மீறி அனுமதியில்லாமல் கட்டி கொடி, தோரணங்கள் ஆகியவைகளை கட்டியிருந்தனர்.இந்த விதி மீறல் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குப்புச்சாமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com