இன்று முற்பகல், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் மதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக, சிவகங்கையில் இருந்து மதுரைக்குச் சென்ற ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வழியாகத்தான் சென்றார். அவர், மதுரை ஆர்ச் பிஷப்பை சந்தித்து தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு கோரினார்.
ஆனால் அவர் வந்தது குறித்து மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கட்சி அலுவலகத்தை அவர் கார் கடந்து சென்றபோது, கட்சியினர் ஆச்சரியத்தில் இருந்தனர். மேலும், ஞானதேசிகன் கட்சி அலுவலகத்தில் இருப்பது குறித்து காங்கிரஸாருக்கு முன்னரே தகவல் தெரியும். இருப்பினும், ப.சிதம்பரம் ஞானதேசிகனை சந்திக்கவே இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.