மதுரையில் பயிற்சி இல்லாத தேர்தல் அதிகாரிகள்: ஆவண விவாரக குழப்பதில் வாக்காளர்கள் சிரமம்

மதுரையில் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கபப்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
Updated on
1 min read

மதுரையில் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கபப்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் விவகாரத்தில் அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனராம். பூத் சிலிப் கொண்டுவந்தால், அடையாள அட்டை எங்கே என்று கேட்டதாகவும், புகைப்பட அட்டை இருந்தால்தான் ஓட்டு என்று கூறுவதாகவும், புகைப்பட அட்டை மட்டும் இருந்தால், பூத் சிலிப் எங்கே என்று கேட்டதாகவும் தெரிகிறது. அட்டையில் பாகம் எண் குறிப்பிடவில்லை என்பதால்,

பூத் சிலிப் தேவை என்கின்றனர் அதிகாரிகள். இதனால் மதுரையில் சில இடங்களில் 20 பேர் வாக்காளர்கள் இருந்தால் அவர்களில் 5 பேரே சிரமமின்றி வாக்களிக்கின்றனர்.  சிலர் திரும்பி விடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com