விருதுநகர் மக்களவை தொகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்தனர்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், நகராட்சி மற்றும் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்தனர். இதில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வலுக்கலொட்டி கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் பெண்கள் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிலும், நிற்பதற்கு முடியாமலும், கடும் வெய்யில் அடித்ததாலும் பெண்கள் மரத்தடியில் காலையில் 8 மணிக்கு வந்து நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.
அதையடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து சென்றனர். அதேபோல், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாலவநத்தம், கூரைக்குண்டு, மெட்டுக்குண்டு கிராமத்திலும், தென்காசி மக்களவை தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த அழகாபுரி, கரிசல்குளம் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மணிக்கொரு முறை வாக்கு பதிவு நிலவரம் வருமாறு: காலையில் 9 மணி நிலவரப்படி 16.23 சதவீதமும், 11 மணிக்கு 36.03 சதவீதமும், 1 மணிக்கு 46.05 சதவீதமும் மற்றும் 3 மணி நிலவரப்படி 59.01 சதவீதமும் வாக்கு பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.