ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்: புஷ்ப யாகத்துடன் நிறைவு

ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஜூலை மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஐந்து கெருட சேவை, சயன திருக்கோலம் என பல்வேறு நிகழ்ச்சிகள்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2014, 3:31 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் சனிக்கிழமை இரவு புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது.

ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஜூலை மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஐந்து கெருட சேவை, சயன திருக்கோலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 30-ம் தேதி நடைபெற்றது.

12-ம் திருநாளான சனிக்கிழமை காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தி நடைபெற்றது. இரவு வெள்ளிக்கிழமை குறடில் ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.