எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநெல்வேலி அருகே ரயில் முன் பாய்ந்து ஐ.டி.ஐ. மாணவர் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் ரயில் முன் பாய்ந்து ஐ.டி.ஐ. மாணவர் திங்கள்கிழமை தற்கொலை செய்தார்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 3:15 pm

முத்துக்குமார்

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் ரயில் முன் பாய்ந்து ஐ.டி.ஐ. மாணவர் திங்கள்கிழமை தற்கொலை செய்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தண்டவாளத்தில் சிறுவனின் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் திருநெல்வேலி நகரம் தர்மராஜா கீழத்தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் சுடலை (16) என்பது தெரியவந்தது. பேட்டை ஐ.டி.ஐ.யில் படித்து வந்த இவர், கடந்த ஒரு வாரமாக கல்வி கற்க செல்லவில்லையாம். இதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் தாழைத்துக்குச்சென்ற அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பார்வதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.