ஆம்பூர் அருகே மாமியார் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவருடைய தந்தை ஆம்பூர் தாலுகா போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்துள்ளார்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த சம்பத் மகள் சத்யாவிற்கும் (22), திருப்பத்தூர் அருகே சமுத்திரம் கிராமம் மணி மகன் முருகனுக்கும் (25) சுமார் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு காரணமாக அண்மையில் சத்யா கணவருடன் கோபித்துக் கொண்டு விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியை அழைத்து செல்வதற்காக திங்கள்கிழமை விண்ணமங்கலத்திற்கு முருகன் வந்துள்ளார். அப்போது முருகனுக்கும், சத்யாவின் உறவினர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சத்யாவின் தாய் வீட்டில் முருகன் தூக்கில் சடலமாக தொங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முருகனின் தந்தை மணி ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

