எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநெல்வேலி பாலபாக்யா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள பாலபாக்யா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2014, 8:59 am

முத்துக்குமார்

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள பாலபாக்யா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு அருகே பாலபாக்யா நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (62). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது 2 மகள்களும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமசாமி தனது மனைவியுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றாராம்.

பின்னர் இருவரும் வியாழக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 8 பவுன் தங்கநகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்ததும் தடயவியல் நிபுணர்கள் வந்து விரல் ரேகைகளைப் பதிவு செய்தனர். திருநெல்வேலி சந்திப்பு குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.