விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் வியாழக்கிழமை தொடங்கி, தொடர்ந்து செப்-4ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தற்போது 10-வது வார்டு ஆரிப் அலி(திமுக), 21-வது வார்டு உறுப்பினர் தங்கப்பாண்டியம்மாள்(அதிமுக), 34-வது வார்டு விவேக்ராஜன்(சுயே) ஆகியோர் காலமானார்கள். அதனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் உறுப்பினர் பதவி காலியாக இருந்து வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமலும் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, தற்போது உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து செப்-4ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதன் பின் வருகிற செப்-5ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனையும், செப்.8ம் தேதி தேதி வேட்பு மனுக்கள் மாலை 3 மணி வரையில் வாபஸ் பெறவும், அதே நாளில் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட இருக்கிறது.
இதையடுத்து, வருகிற செப்-18ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவும், செப்-22ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. மேலும், இத்தேர்தல் தொடர்பாக வேட்பு மனுத்தாக்கல் மற்றும் விவரங்கள் தகவல் பலகையில் வெளியிட்டுள்ளதாகவும் அல்லது நகராட்சி அலுவலக நேரத்தில் அலுவலர்களிடமும் கேட்டறிந்து கொள்ளலாம் எனவும் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.