பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான் சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. .
தெற்கு வர்ஜிஸ்தான் மலைப்பகுதயில் பதுங்கியிருந்து அவரை பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தீவிர வேட்டையின் போது சுட்டுக்கொன்றது. 39 வயதான சுக்ரிஜூமாஹ் நியூயார்க் சுரங்கபாதை குண்டு வெடிப்பு மற்றும் இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவார். இவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அறவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.