பள்ளிகொண்டா அருகே சாலை விபத்து 3 பேர் பலி

பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-
Updated on
1 min read

பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-

ஓசூரில் இருந்து சென்னை வந்த அரசு ஒன்று இன்று காலை பள்ளி கொண்டா அருகே வந்த் அபோது மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இதில் 5 பேர் காயம் அடைந்தார். இதையடுத்து பின்னால் வந்த பெங்களூரில் இருந்து வேலூர் சென்ற பேருந்து ஒன்று அந்த பஸ் மீது மோதியது இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த மல்லிகா,(40) அவரது கணவர் ரங்கநாதன், (45) மற்றும் செய்யாறு ராஜேந்திரன் மகள் அபிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

38 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com