தினக்கூலி பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி நாள்தோறும் கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில், நிறுத்திவைக்கப்பட்ட 14-மாதத்திற்கான அகவிலைப்படியை உடனே வழங்கவும், தினக்கூலி பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி நாள்தோறும் கூலி வழங்கவும் மற்றும் ஏற்கனவே கடந்த ஜூலை-22, டிச-2 ஆகிய நாள்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினை தவிர மற்ற அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.