விருதுநகர் அருகே அரசு விரைவு பேருந்து தலைக்குப்புற கவிழந்து விபத்துக்குள்ளாதில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி அரசு விரைவு பேருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றது. அப்போது, விருதுநகர் அருகே மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரேயுள்ள 4 வழிச்சாலையை கடந்த சென்ற போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு சர்வீஸ் சாலையில் தலைகுப்புற கவிழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஓட்டுநர் கிருஷ்ணகுமார்(40), நெல்லை அருகே வள்ளியூரைச் சேர்ந்த நடத்துநர் சசிக்குமார்(38), பயணிகளான அம்பசமுத்திரத்தைச் சேர்நத முத்துராமலிங்கம்(45) மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரதீப்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலக்கரை போலீஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

