அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரமுனி தலைமை வகித்தார். மேலும், நகரச்செயலாளர் விநாயகம், ஒன்றியச் செயலாளர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட
அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மின் கட்டணம், பால் மற்றும் அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட தேமுதிகவினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரமுனி தலைமை வகித்தார். மேலும், நகரச்செயலாளர் விநாயகம், ஒன்றியச் செயலாளர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில கேப்டன் மன்ற செயலாளர் ஷெரீப் பங்கேற்று சிறப்புரையாற்றி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், மின் கட்டணம், பால் மற்றும் அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com