அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சாத்தூர் அருகே நகையை திருட முயற்சி செய்த 2 பேர் கைது

சாத்தூர் அருகே நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறி நகையை திருட முயற்சி செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :22 டிசம்பர் 2014, 2:22 pm

சாத்தூர் அருகே நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறி நகையை திருட முயற்சி செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பாலதங்கம்மாள்(32) வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பணமில்லாமல் நகை பாலீஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். அதை உண்மையென நம்பிய பாலதங்கம்மாள் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை எடுத்துக் கொடுத்தாராம்.

   அப்போது, மர்ம நபர்கள் நகையை கையில் வாங்கியவுடன் தப்பியோட  தொடங்கினார்களாம். இதைத் தொடர்நது அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் தப்பியோடிய இருவரையும் பொதுமக்கள் மடக்கி  பிடித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை செய்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்குமார்(21), சுராஸ்குமார்(20) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.