திருப்பூரில் ஐக்கிய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் துறை சார்ந்த கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பேசும் போது வரும் 29ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள அதிகாரிகள் கூட்டத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள சிக்கல்கள் களையப்படும். திருப்பூரின் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.