ராஜபாளையம் அருகே குழந்தையுடன் தாய் மாயம் கணவர் புகார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மனைவி காமலட்சுமி(32). இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டிலிருந்து ஒன்றைரை வயது குழந்தை
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மனைவி காமலட்சுமி(32). இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டிலிருந்து ஒன்றைரை வயது குழந்தை மகாலட்சுமியுடன் கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றாராம். அதையடுத்து நீண்டநேரமாகியும் வீடு  திரும்பிவில்லையாம். இதனால் கவலையடைந்த கணவர் மாயக்கண்ணன் தனது உறவினர்களின் வீடுகளில் சென்று விசாரித்துள்ளார். ஆனால், தனது மனைவி எங்கிருக்கிறார் என்கிற விவரம் தெரியவில்லையாம். இதையடுத்து, செவ்வாய்கிழமை இரவு சேத்தூர் காவல் நிலையத்தில் மாயக்கண்ணன் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காமலட்சுமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com