மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு மூதாட்டியை கட்டி போட்டி 40 பவுண் நகை கொள்ளை

மதுரை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில்  வசித்து வரும் சுசிலா 58 நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில்
Updated on
1 min read

மதுரை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில்  வசித்து வரும் சுசிலா 58 நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் புகுந்த 3 மர்ம மனிதர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டியதோடு கட்டி போட்டு வீட்டில் இருந்த 40 பவுண் நகையை திருடி சென்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் மற்றும் கருப்பாயூரணி போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் கட்டிப் போட்டதில் லேசான காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் கருப்பயூரணி போலீஸார வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com