ராமர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீவெங்கடஜலபதி-ஸ்ரீபத்மாவதி சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை

இக்கோயில் வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி சிலையும்-அருள்மிகு ஸ்ரீபத்மாவதி தாயார் சிலையும்
Updated on
1 min read

விருதுநகர் ஸ்ரீராமர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீவெங்கடாஜலபதி-ஸ்ரீபத்மாவதி தாயார் சிலையும் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி சிலையும்-அருள்மிகு ஸ்ரீபத்மாவதி தாயார் சிலையும் திருப்பதியில் இருந்து பிற்பகலில் விருதுநகருக்கு கொண்டு வந்தனர். அப்போது, ஸ்ரீவெங்கடாஜலபதி பக்த குழுவினர் திரளாக மேளதாளத்துடனும், கோலாட்டம் ஆடியும் சென்று கச்சேரி சாலையில் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மதுரை சாலையில் வந்து ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட  தெருக்கள் வழியாக ராமர் கோயில் வளாகத்தை வந்தடைந்தது.

அதையடுத்து இக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும்  பக்தர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவெங்கடஜலாபதி பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com