விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையாண்டி-முனியம்மாள் தம்பதியரின் மகன் முத்துமுனியாண்டி(24). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். அதேபோல்,
Updated on
1 min read

விருதுநகர் அருகே வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையாண்டி-முனியம்மாள் தம்பதியரின் மகன் முத்துமுனியாண்டி(24). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். அதேபோல், சனிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. அப்போது,  வீட்டில் அனைவரும் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக்  தனக்கு தானே வீட்டில் உத்தரத்தில் உள்ள மின்விசிறியில் கயிறால் தூக்கிட்டுக் கொண்டாராம்.

அப்போது அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனே விரைந்து வந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com