விபத்தில் படுகாயமுற்ற மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (32), ம.புளியங்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (32), விபீஷணபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் (30), கோவிலாம்பூண்டியைச் சேர்ந்த பார்வதி (32), கொத்தட்டை முத்தம்மாள் (30), பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45), மடுவங்கரையைச் சேர்ந்த சுரேஷ் (35), தில்லைவிடங்கனைச் சேர்ந்த அபிநயா (26), கலைவாணி (28) உள்ளிட்ட 16 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து, மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினார். விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.