இத்தகவல் அறிந்த தலித் மக்கள் அப்பகுதியில் திரண்டனர். அதேவேளையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தாங்கள் யாரும் தாக்கவில்லை, வேண்டுமென்றே புகார் தெரிவிப்பதாக ஒன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பிகள் ஆர்.ராஜாராம் (சிதம்பரம்), சுரேஷ்பாபு (சேத்தியாத்தோப்பு), இன்ஸ்பெக்டர்கள் பி.முருகானந்தம் (அண்ணாமலைநகர்), உதயகுமார் (பரங்கிப்பேட்டை), அம்பேத்கர் (சேத்தியாத்தோப்பு) மற்றும் அதிரடிப்படை போலீஸார் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.