இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனித உரிமை கட்சி தலைவர் எல்.ஆர்.விஸ்வநாதன் காரில் புதன்கிழமை காலை அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது கார் மீது, ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கிய கண்ணாடிகள் உடைப்பட்டன. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் 40 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு பரஞ்ஜோதி (38), கணபதி (38) ஆகிய இருவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் கபிலன், அலெக்சாண்டர், சுதாகர் ஆகிய 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.