தமிழகத்தில் மொத்தம் 185 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீயணைப்பு மீட்புத்துறையில் சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 2 ஆயிரம் பேர் தீயணைப்போராக பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை ஆகிய மூன்று துறைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு தேர்வர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், முதுநிலை அடிப்படையிலும் காவலராகவோ அல்லது தீயணைப்போராகவோ அல்லது சிறைக்காவலராகவோ தேர்வு செய்யப்பட்டு அந்தந்த துறைகளில் பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.