விருதுநகர் அருகே கண்மாய் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(64). இவர் ஊருக்கு மேற்கு மாரியம்மன் கோயில் கண்மாய்க்கு சனிக்கிழமை மாலையில் துணிகளை துவைத்து குளிப்பதற்காக சென்றாராம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(64). இவர் ஊருக்கு மேற்கு மாரியம்மன் கோயில் கண்மாய்க்கு சனிக்கிழமை மாலையில் துணிகளை துவைத்து குளிப்பதற்காக சென்றாராம். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி மகாலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாமி சிலை திருட்டு: விருதுநகர் அருகே உள்ளது பாவாலி கிராமம். இங்குள்ள குளக்கரையில் ஜமீன்தார் காலத்தில் வைக்கப்பட்ட சிலையை பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குளக்கரை பிள்ளையார் சாமி சிலையை திருடிச் சென்றனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் குளக்கரையில் குளிப்பதற்காக வந்த பொதுமக்கள் பிள்ளையார் சிலை திடீரென காணாமல் போயிருந்தது கண்டு திடுக்கிட்டனர். உடனே இது தொடர்பாக கிராம மக்கள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் குளக்கரையில் இருந்த பிள்ளையார் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com