சிதம்பரம் ஓமக்குளத்தில் வள்ளி என்பவரது வீட்டில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு தீப்பிடித்தது. தீ பரவி அருகாமையில் இருந்த அஞ்சலி, பத்மாவதி ஆகியோரது வீடுகளும், முருகவேல் என்பவரது மரக்கடை, அண்ணதுரை என்பவரது கடை ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த நிலையஅலுவலர் முகமதுஜகாங்கீர் தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். தீவிபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமுற்றதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர் முகமது ஜியாவுதீன், பால் வளத்தலைவர் சி.கே.சுரேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அரசு நிவாரண உதவிகளான அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினர்.