இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அரசு பள்ளி விடுதியை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரி

ஆதிதிராவிட நலத்துறை மூலம் செயல்படும் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி உணவகத்தில் உணவு சரியாக இல்லை என்று புகார் செய்து விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை

News image
Updated On :15 ஜூலை 2014, 3:05 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அரசு நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி உணவகத்தை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிட நலத்துறை மூலம் செயல்படும் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி உணவகத்தில் உணவு சரியாக இல்லை என்று புகார் செய்து விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா, ஆய்வாளர்கள் மாரிமுத்து (குமராட்சி), பத்மநாபன் (சிதம்பரம்) ஆகியோர் உணவு விடுதியினை ஆய்வு செய்தனர்.

அப்போது மாணவர்கள் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதில்லை, சாம்பாரில் காய்கறிகள் போடுவதில்லை, வெளியாட்கள் உள்ளே வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தார். ஆய்வின் போது சமையலறை அசுத்தமாகவும், சுகாதாரக் கேடாகவும் இருந்ததும், உணவு சரியாகவில்லை என்பதை கண்டறித்து விடுதி வார்டன் மற்றும் சமையலர்களை எச்சரிக்கை செய்தார்.  சமையலறையை சுத்தமாக வைத்து, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரி வார்டன் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.