விசாரணையில் சீதாவை கொலை செய்துவிட்டனர் என்ற விபரம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கணவர் சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஜூலை 15-ம் தேதி சரணடைந்தார். சரணடைந்த சரவணனை நீதிபதி கார்த்திகேயன் புவனகிரி போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சரவணனை கைது செய்த புவனகிரி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் சரவணன், அவரது தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகியோர் சேர்ந்து சீதாவை சிதம்பரம் அருகே சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார்டனுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அந்த உடலை அங்கேயே புதைத்தது தெரிய வந்துள்ளது.