10 நாள்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில், 5-ம் திருநாளான 26-ம் தேதி (சனிக்கிழமை) ஐந்து கருடசேவை நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகியோர் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வர் சிறய அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.7-ம் திருநாளான 28-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நடைபெறும். ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.