தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், கூட்டுறவு நகர வங்கியின் தலைவரும், தொகுதி செயலாளருமான எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினரும், அ.தி.முக. மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஏ.மீராதனலட்சுமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகளின் வழியே வந்து இரண்டரை மணி நேரத்தில் நிலை அடைந்தது.