முறைகேடு செய்த ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் மாவட்டம், மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர். அதையடுத்து, ஊராட்சி தலைவர் மீது
முறைகேடு செய்த ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

விருதுநகர் அருகே எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல் ஊராட்சி நிதியை கையாடல் செய்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம், மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர். அதையடுத்து, ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து பின் 4 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனுக் கொடுப்பதற்கு அனுமதித்தனர்.

மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனி பொதுமக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்தது அம்பேத்கார் காலனி ஆகும். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வளாகம் மற்றும் கழிவு நீர் வாறுகால் வசதிகளை நிதி ஒதுக்கீடு செய்தும் எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால், பொது இடங்களில் கழிவு நீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையிருக்கிறது.

இது தொடர்பாக ஊராட்சி தலைவரிடம் முறையிட்டால் எதுவும் செய்து தரமுடியாது என மறுக்கிறார். ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை கையாடல் செய்தும் வருகிறார். இதுவரையில் தாய் திட்டத்தில் மயானச் சாலை அமைத்தல், குடிநீர் தனிநபர்களுக்கு அமைத்து கொடுத்தல், தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தில் போலி அட்டைகளை பயன்படுத்துதல், பட்டாசு தொழிற்சாலைகளில் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு குறைந்த அளவில் ரசீது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். கிராம மக்கள் தவறுகளை தட்டிக் கேட்டால் கொலை மிரட்டலும் விடுத்தும் வருகிறார்.

பின்னர் காலனிப் பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் போது கதவு தட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதோடு, என்னைப்பற்றி யார் புகார் செய்தாலும், அவர்களுக்கு துணைபோகிறவர்களையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பேத்கார் காலனி பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com