விருதுநகர் அருகே விபத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளை உள்பட 2 பேர் சாவு

விருதுநகர் அருகே பெண் பார்க்கச் சென்ற போது 4 வழிச்சாலையில் தடுப்பு கம்பி மீது மினி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 2
Updated on
1 min read

விருதுநகர் அருகே பெண் பார்க்கச் சென்ற போது 4 வழிச்சாலையில் தடுப்பு கம்பி மீது மினி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுதர்சன்(36). இவரது திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு மினி வாகனத்தில் அவரது உறவினர்கள் 5 பேருடன் செவ்வாய்கிழமை இரவு புறப்பட்டு சென்றனர். அப்போது இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டினாராம். விருதுநகர் சூலக்கரை ஆயுதப்படை மைதானம் எதிரே இரவு 2 மணிக்கு சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 4 வழிச்சாலை இரும்பு தடுப்பு மீது மோதியது.

இந்த விபத்தில் மாப்பிள்ளை சுதர்சன், ஓட்டுநர் வேணுகோபால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். அவரது உறவினர்களான உமாராணி(45), ராமகிருஷ்ணன்(40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே தகவல் கிடைத்ததன் பேரில் சூலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாப்பிள்ளையின் சித்தப்பா சண்முகம் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com