மதுரை காமராஜர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தமிழர் அமைப்புகள் முற்றுகையிட உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சென்னையில் சத்திய மூர்த்தி பவன் கட்டடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி பெரும் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் அந்தப் பகுதியில் பெருமளவில் குவிந்து வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.