மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லையில் ரூ.1.5 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு

Updated On :20 மார்ச் 2014, 2:55 pm

திருநெல்வேலியில் தகுந்த ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1.5 லட்சத்தை தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி அபிஷேகபட்டியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸாரும், அதிகாரிகளும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த ஒரு காரில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ.1.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் வந்த கேரள மாநிலம், ஏர்ணாகுளம் மாவட்டம், மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மேத்யூவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் பணத்தை பறிமுதல் செய்து திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.