தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைநாள்களை ஆண்டுக்கு 150 நாள்களாக அதிகப்படுத்தியும், கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிகைககளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை அகிலந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், கிராமங்களில் வறட்சி காலங்களில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாள்களை 150 நாள்களாகவும், கூலியாக ரூ.167ம் வழங்க வேண்டும்.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவும் மற்றும் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.