கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை ஜூன் 1 ல் திறப்பு: பாபநாசம் அணை திறக்க வலியுறுத்தல்
கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் பெருங்கால் பாசனத்தில் 2,700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தாமிரவருணி பாசன செயற்பொறியாளர் ம. முத்துபாண்டியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.








