திருச்செந்தூர் கடலில் கிடந்த 2 யானை தந்தங்கள் மீட்பு

திருச்செந்தூர் கோவில் கடலில் கிடந்த 2 யானை தந்தங்களை சிப்பி அரிக்கும் தொழிலாளிகள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர் கடலில் கிடந்த 2 யானை தந்தங்கள் மீட்பு
Updated on
1 min read

திருச்செந்தூர் கோவில் கடலில் கிடந்த 2 யானை தந்தங்களை சிப்பி அரிக்கும் தொழிலாளிகள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருச்செந்தூர் வடக்குமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (35). கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளியான இவர் தனது நண்பர்களான அதே தெருவைச் சேர்ந்த சிவராஜா மற்றும் மணி ஆகியோருடன்

புதன்கிழமையன்று பகலில் கடலில் சிப்பி அரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலில் சுமார் ஒன்றரை உயரம் கொண்ட இரண்டு யானை தந்தங்கள் கிடைத்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் திருச்செந்தூர் கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவலர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து காவல் ஆய்வாளர் இந்திரா விசாரித்து வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com