வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மீனவர்கள் தண்டனை ரத்து கோரி ரயில் மறியல்: நெல்லையில் 46 பேர் கைது

தமிழக மீனவர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :3 நவம்பர் 2014, 9:02 am

ஷேக் அப்துல்காதர்

தமிழக மீனவர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், பிரசாத், செல்வன் லாங்கெட் லோயலோ ஆகியோருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தண்டனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திருநெல்வேலி சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணிமாவீரன் தலைமையில் மறியிலில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட இணைச் செயலர் பொட்டல் கண்ணன், கட்சியின் நிர்வாகிகள் கிங்தேவேந்திரன், எட்வின், அழகர்சாமி, கோ. துரைபாண்டியன், நெல்சன், மணிமாறன் மற்றும் பெண்கள் உள்பட 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.