விருதுநகர் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம்

காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்காக தேவை பட்டியல் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு
Updated on
1 min read

காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்காக தேவை பட்டியல் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் காவல் துறையில் தொலைத் தொடர்பு நவீனமயமாக்கும் திட்டம் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஏற்கனவே அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆன்லைனில் கணினி மூலம் வழக்கு விவரங்களை பதிவேற்றம் செய்தல், வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பற்றி  கைரேகையுடன் பதிவேற்றம் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் காவல் துறையில் பணியாற்றும் எஸ்.பி முதல் காவலர்கள்   வரையிலான அனைவருக்கும் பி.எஸ்.என்.எல் குரூப் சிம்கார்டு வழங்கும் திட்டத்தை அரசு மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 48 காவல் நிலையங்களில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 2800 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கப்பட இருக்கிறது.

காவலர்கள் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது, அவர்கள் குடும்பத்தினருடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதைக் கருத்திற் கொண்டு காவலர்களும் எந்த இடத்திலிருந்து உடனுக்கு உடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த தாய், த்ந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் மனைவி ஆகியோருடன் பேசும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குரூப் சிம்கார்டுகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்பு காவலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மாத கட்டணமாக ரூ.247 மட்டும் அரசு செலுத்தி வந்தது. அதை காவல் துறையினருடன் மட்டும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. தங்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டது.

இதைக் கருத்திற் கொணடு போலீஸாரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் 7 சிம்கார்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஒரு சிம்கார்டுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ.30 பிடித்தம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல், ஆண்டு வாடகை ரூ.264ஐ அரசு செலுத்தும். இதன் மூலம் காவல் துறையினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் கட்டணமில்லாமல் தொடர்பு கொண்டு பேசலாம். இதில், எத்தனை பேருக்கு சிம்கார்டுகள் தேவை என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக  காவல் துறையினர் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com